9
இந்தியாவில் தமிழகம் உட்பட பல வேறு பகுதிகளில் நாளை (1208/2019) ஹஜ் பெருநாளை முன்னிட்டு முக்கிய நாளாகிய அரஃபா தினத்தை முன்னிட்டு இன்று (11/08/2019) முஸ்லிம் சமுதாயத்தினர் நோன்பு நோற்றனர்.
நோன்பு என்றாலே நோன்பு கஞ்சி என்பது ஒரு முக்கியமான உணவு பொருளாகும். அதை முன்னிட்டு வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாகவும் மற்றும் பல் வேறு அமைப்புகள் சார்பாகவும் இன்று நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. வடக்குத்தெரு சமூக நல அமைப்பு Nasa வின் சார்பாக கடந்த வருடம் போல் இந்த வருடமும் அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.