தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 2018 – 19 ஆம் ஆண்டில் தேர்வான காவலர்கள் , காவலர் பயிற்சி மையங்களில் 7 மாத உடற்பயிற்சி மற்றும் காவல் நிலையங்களில் ஒரு மாத நடைமுறை பயிற்சி நிறைவுக்கு பின் அனைத்து மாவட்டங்களிலும் பணி அமர்த்தப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்த 164 காவலர்களை காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா வரவேற்று, பணி புரிவதற்கான அறிவுரை வழங்கினார். தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறைக்கு வழங்கிய வஜ்ரா (கலவர தடுப்பு ) வாகனத்தை ஆய்வு செய்தார்.
You must be logged in to post a comment.