08.08.2019 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இராமநாதபுரம் மாவட்ட ரோட்டரி கிளப் மற்றும் கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான ரோட்ராக் நிறுவுதல் விழா நடைபெற்றதை. அவ்விழாவில் கீழக்கரையின் பல்வேறு பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கின்ற ஆசிரிய ஆசிரியர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வடக்குத்தெரு முஹிய்யிதீனிய்யா பள்ளியின் முதல்வர் டாக்டர்.N.M.சேகு சகுபான் பாதுஷாவுக்கு கீழக்கரையில் அமைந்துள்ள பள்ளிகளில் சிறந்த முதல்வர் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு “துரோணச்சார்யா விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று (09.08.2019) வெள்ளிக்கிழமை, பள்ளியின் தொடக்க நேரத்தில் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் முஹைதீனிய்யா நிர்வாகத்தின் சார்பாகவும் பரிசு பெற்ற பள்ளியின் முதல்வருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.