இந்திய கம்யூஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்றபோது கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்நிலையில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்றபோது அவரை இராணுவம் கைது செய்தது. இதனை கண்டிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டன்சத்திரம் தாலுகா குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி மற்றும் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பகுதி கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..