5
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ 3000 ஆக உயர்த்துவது, கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோட்டாட்சியர் பானுகோபன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
You must be logged in to post a comment.