இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 118 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசல் முன் ஊர்வலமாக கிளம்பியது. நாட்டியக் குதிரைகள் நடனமாட , வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட, பேன்ட் வாத்தியங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்த ஊர்வலம் தர்ஹாவை வந்தடைந்தது. அங்கு சந்தனக் கூடு தர்ஹாவை மூன்று வலம் வந்தது. இதன் தொடர் நிகழ்வாக மினர்வா கோபுரத்தில் இருந்து வண்ண மலர்கள் தூவ நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது. ஆக., 18, 19 ஆகிய தேதிகளில் சந்தனக் கூடு விழா அதிவிமர்சையாக நடைபெறுகிறது. ஆக., 29 கொடியிறக்கப்படுகிறது. சந்தனக் கூடு விழா குழு தலைவர் ஹாஜா நஜிமுதீன், துணைத் தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல் ஹமீது, செய்யது இப்ராஹிம்ஷா, செயலாளர் களஞ்சியம், துணை செயலாளர்கள் யூ.ஹபிபுல்லா, இ.கபிபுல்லா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜமாத் தலைவர் மீராசா, ஜெமீல் கான் மற்றும் செய்யதலி ஒலியுல்லா தர்ஹா நிர்வாகிகள், சுல்தானியா சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
5
previous post
கஞ்சா விற்ற பெண் கைது
next post
You must be logged in to post a comment.