7
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிட வலசை ஆரம்பப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை தலைமை ஆசிரியர் நா.கோமகன் தலைமையில், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் உத்ர செல்வி வழங்கினார். குடற்புழு மாத்திரையை 6 மாதங்களுக்கு ஒரு முறை விழுங்கி உடல் ஆரோக்கியம் பேண வேண்டும் என மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் திருமேனி நாயகம் ஏற்பாடு செய்திருந்தார்.
You must be logged in to post a comment.