அணை ப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி அணைப்பட்டி யில் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஜீனத் பானு தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

முகாமில் பட்டா மாறுதல் ,முதியோர் உதவித்தொகை வாரிசுச் சான்று ,சாதி சான்று , மற்றும் இப்பகுதி விவசாயிகள் களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் , மானியத்துடன் கூடிய மின் இணைப்பு தர வேண்டிய கோரியும் முன்னாள் சித்தர்கள் நத்தம் கவுன்சிலர் சக்திவேல் தலைமையில் முகாமில் மனு கொடுத்தனர். 40 மனுக்கள் வரப்பட்டது .  உடனடியாக 37 மனுக்களுக்கு ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இம்முகாமில் மண்டலத் துணை தாசில்தார்கள் ருக்மணி, பானு லட்சுமி,வருவாய் ஆய்வாளர் சரவணமுத்து, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி செயலாளர் சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..