மதுரை நாகரில் விபத்தில்லா மதுரை யாக மாற்ற காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.குறிப்பாக வாகன தணிக்கை செய்து ஹெல்மெட் அணியவில்லை என்றால், வண்டியில் உரிய ஆவனங்கள் இல்லை என்றால் அபராதம் உடனடியாக அபராதம் என உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அதன்படி திடீர்நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலமாரட் டவுன்ஹால் ரோடு சந்திப்பில் காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்அப்போது மதுரை தத்தனேரி பத்மம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த இருளாண்டி மகன் குருசாமி இரு சக்கர வாகனத்தில் வந்தார்அவரிடம் எந்த ஆவணமும் இல்லாமல் வந்தது தெரிய வந்தது. அவர் உடனேஇரயில்வேயில் டி. டி. யாக வேலை பார்ப்பதாக கூறியதோடு காவலர்களை சரமாரியாக வசைப் பாடினார்காவல் துறையினர் குருசாமி மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.