தொண்டி கிராமத்தில் புயல் மற்றும் வெள்ளம் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மீட்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பங்கேற்பு.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் தொண்டியில் இன்று (04.8.2019) நடைபெற்ற புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் நேரில் பார்வையிட்டு அலுவலர்களிடத்தில் அறிவுரை வழங்கினார்.தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. புயல் மற்றும் வெள்ளம் வரும்பட்சத்தில்.இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக புயல் மற்றும் வெள்ளம் எச்சரிக்கை முன் அறிவிப்புகள் பெறப்படும்போது, அத்தகைய எச்சரிக்கை அறிவிப்புகள் மாவட்ட அவசர கால செயலாக்க மையம் வாயிலாக பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மீட்புக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எவ்வாறு சென்றடைகிறது என்பதை கண்காணித்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.             இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான திருவாடானை வருவாய் வட்டம் தொண்டி கிராமத்திலும், கீழக்கரை வருவாய் வட்டம் கல்பார் கிராமத்திலும் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தொண்டியில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பங்கேற்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்,பொதுசுகாதாரம், கால்நடை பராமரிப்பு, உள்ளாட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் விதமாகவும், மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கி பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் வழங்கும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது.

மழை வெள்ளத்தால் தொண்டி கிராமத்தில் உள்ள தனியார் வணிக வளாகம்இடிந்து விழுந்து பொதுமக்கள் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அவசர கால செயலாக்க மையத்திலிருந்து மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு தீயணைப்பு மீட்புப்பணிக் குழு, பேரிடர் மேலாண் பயிற்சி பெற்ற காவல் துறை மீட்புக்குழு அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்கும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தொண்டி கடற்கரை சாலையில் உள்ள முருகன் கோயில் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் மீட்புக்குழுவினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் மருத்துவ உதவி வழங்கும் விதமாக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. மழை, வெள்ளத்தால் தொண்டியில் உள்ள தனியார் உணவு விடுதியில் பொதுமக்கள் 30 பேர் சிக்கியுள்ளதாகவும், தொண்டியிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் 5 பேர் சிக்கியுள்ளதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு மீட்புக்குழு அலுவலர்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தொண்டி அரசு மருத்துவமனையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தொண்டி கிராமப் பகுதியில் தேங்கிய மழை வெள்ளத்தில் முதலை தென்படுவதாக மக்கள் தகவல் தெரிவிப்பதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக வனத்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் மாசு ஏற்பட்டு சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக எச்சரிக்கை தகவல் அறிவிப்பு வழங்கப்பட்டு பொது சுகாதாரத் துறை மூலம் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கீழக்கரை வருவாய் வட்டம் கல்பார் கிராமத்திலும் பல்வேறு அவசர கால எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.பாதுகாப்பு ஒத்திகையில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன்,ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் (பொ) ஆர்.சுரேஷ்குமார், தொண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் ஜெ.அருளானந்து, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேஸ்ரன், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன், எம்.கோகிலா, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் உட்பட அரசு அலுவலர்கள், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..