12
கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் சார்பில் “குடி நீரை வீணாக்காமல் பயன்படுத்துவோம்” “குடிநீர் விலைமதிப்பற்றது குடிநீரை வீணாக்காதீர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கீழக்கரையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வையில் படுமாறு ஒட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனிய சங்கர், செயலாளர் செய்யது முகமது ஹசன், பட்டய தலைவர் அலாவுதீன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் ராசிதீன், அப்பாஸ் மாலிக், சுந்தரம், மரியதாஸ், பாலசுப்ரமணியம் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக 500க்கும் மேற்பட்ட பதாகைகள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.