தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வடிவேல் காலமானார்.

திமுக முன்னாள் ஒருங்கிணந்த திருச்சி மாவட்ட கழக செயலாளரும், கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பருமான, தொட்டியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.வடிவேல் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். (வயது 94). மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.அவருடைய சொந்த ஊரான திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார் புதூரில் உள்ள சொந்த வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை 02.08.19 அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவருடைய உறவினர் தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..