ஆவின் பால் பாக்கெட் காலி கவர்களை திரும்ப ஒப்படைத்தால், அதற்கு பணம் தரப்படும்’ என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில், ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள், அதன் காலி கவர்களை சில்லறை வணிகர்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு கவருக்கு 10 காசு வீதம் பெற்றுக் கொள்ளலாம்.
ஆவின் நிறுவனத்தின் இந்த இதன் மூலம், தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் காலி கவர்களை குப்பைகளில் வீசும் நிலை உள்ளது. எனவே, ஆவின் நிறுவனத்தைப் போன்று தனியார் பால் நிறுவனங்களும் காலி பால் கவர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குவதற்கு முன்வர வேண்டும்.சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆவின் கொண்டு வந்துள்ள இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், துணை பொது மேலாளர் ( வடக்கு ) 94442 47327, துணை பொது மேலாளர் (மத்தியம்), 73585 00929, உதவி பொது மேலாளர் (தெற்கு ) 97907 73955 உள்ளிட்டவர்களை தொடர்பு கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.