மதுரையில் சர்வதேச திருச்சபைகளின் ஐக்கிய பேராயம் கலந்தாய்வு கூட்டம் அதன் தலைவர் பேராயர் நோவா யவனராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சபைகள் மற்றும் போதகர்கள் பாதுகாப்பு கோரி, சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த கோரி, அனைத்து கட்சி கூட்டத்தின் போது தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்துவ கூட்டமைப்புகளையும் அழைக்க வலியுறித்தி, மூடப்பட்ட திருச்சபைகள் மீண்டும் திறக்கப்பட கோரி, அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்தவ எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மேலும் பல கல்லறைகளை அரசாங்கம் ஏற்படுத்த கோரி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பேராயர் மோகன்தாஸ், பேராயர் ஜோசப் ஜார்ஜ், பேராயர் ஸ்டீபன், பேராயர் ஜான்சன், மதுரை மாவட்ட பேராயர் டேனியல் மோசஸ் மற்றும் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த அனைத்து மறை மாவட்ட பேராயர்கள் கலந்து கொண்டனர்.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.