அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.அமெரிக்காவின் பாஸ்டன் நகர கடற்கரையில் சர்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து கடல்களை காப்பாற்றுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும், மணல் சிற்பத்தை உருவாக்கினார்.இதன்மூலம், அந்நாட்டு மக்களின் விருப்பத் தேர்வுக்குரிய நபர் விருதையும் பட்நாயக் பெற்றுள்ளார்.
You must be logged in to post a comment.