Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் இளையோர் பாராளுமன்றம் நடைபெற்றது

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் இளையோர் பாராளுமன்றம் நடைபெற்றது

by mohan

இராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் முஹம்மது சதக் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ். ,ஐ.நா.சபை, தன்னார்வ அமைப்பு இணைந்து இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி இன்று (25.07.2019 ) நடைபெற்றது இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10. மேற்பட்ட கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 80. க்கும் மேற்ட்டோர் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

.முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர், அலாவுதீன் அவர்கள் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து உரையாற்றினார் .இராமநாதபுரம் மாவட்ட நீதியரசர் ராமகிருஷ்ணன் மற்றும் சார்பு நீதிபதி பிரீத்தா அவர்கள் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் இளையோர் இளையோர் பாராளுமன்றத்தின் நோக்கம் பற்றி உறையாற்றினார் கல்லூரி துணை முதல்வர்கள் ராஜேந்திரன், சேக்தாவுத், துறைத்தலைவர்கள் சுதேவ் மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் முன்னதாக நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் அக்ரம் வரவேற்றார் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் ராஜேஷ்கண்ணா நன்றியுரையாற்றினார் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் உடற்கல்வி இயக்குனர் மருது மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!