மதுரையில் நடிகர் திலகத்திற்கு மலர் அஞ்சலி.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் அருகே அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தென்மண்டலச் செயலாளர் “செ.வெற்றிக்குமரன்”மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினார். “சிவாஜி கணேசன்” அவர்களின் நினைவு நாளான

இன்று அவரைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாகமலர் அஞ்சலி செலுத்துப்பட்டது.உடன் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாணிக்கம் நடராசன், மதுரை கிழக்கு தொகுதி தலைவர் எரிமலை முருகன், மதுரை வடக்கு தொகுதி செயலாளர் ஜெயக்கொடி சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..