9
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் – 5ம் தேதி நடக்கிறது. தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது பிரச்சாரத்தை கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியான தொண்டான் துளசியில் உள்ள கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரத்தை துவக்கினார்.
செஞ்சி, அரும்பாக்கம், லத்தேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டு கொண்டார். உடன் கே.வி.குப்பம் ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் சென்றார்.
You must be logged in to post a comment.