பெரம்பலூர் மாவட்டம் , குன்னம் வட்டம் பெரிய வெண்மணியில் இயங்கிவரும் மலர்விழி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 15-07-2019 அன்று காலை 10-30 மணி அளவில் பள்ளி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு பள்ளி மாணவர்களுடன் பள்ளியின் தாளாளர் பச்சமுத்து அவர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சிக்கு பரணி ஆசிரியர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .செந்தமிழ்செல்வி ஆசிரியர் முன்னிலை வகித்தார். இந்ரிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா அவர்கள் தலைமை தாங்கினார்.
மக்கள் பாதை சார்பாக வெண்மணி வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார் .
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான பச்சமுத்து அவர்கள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியில் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுத்துரைத்து பேசினார். பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு இனிதே நிகழ்ச்சிகள் நிறைவு செய்யப்பட்டது .
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.