கல்விக்கு உதவுங்கள்… நிரந்தர நன்மையை பெறுங்கள்… ஏழை மாணவர்களுக்கான வேண்டுகோள்..

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், நெய்க்காரபட்டி காயிதே மில்லத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சார்பாக இந்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காயிதே மில்லத்தின் பெயரால் இயங்கும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழ்மையான கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.. இவர்களில் 25 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது பள்ளிக் கட்டணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது பள்ளி நிர்வாகம். அந்த உதவிக்காக வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஆசிரியர் ஊதியம், வாடகை, புத்தகங்கள், எழுதுபொருட்கள், பள்ளிச்சீருடை, காலணி மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் என்ற வகையில் ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு ரூபாய் பத்தாயிரம் என செலவுத் தொகை வருகிறது.  மேலும் ஓரு மாணவனுக்க  ஒருவர் கை கொடுத்தாலே, ஒருவர் ஒரு குழந்தையைக் கல்விக்காகத் தத்தெடுத்தாலே எளிதாக அவர்களின் ஓராண்டிற்கான கல்வித்தேவையைப் பூர்த்தி செய்து விடலாம்..

தங்களது உதவியை நேரடியாக பள்ளியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தலாம். பள்ளியினுடைய ரசீது மற்றும் பள்ளியினுடைய நன்றிக் கடிதமும் கொடையாளருக்கு உடனே வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கி விபரங்கள்:

Quaid-E-Millath Nursery and Primary School

1018101047452

Ifsc code: CNRB0001018

Canara Bank

Palani Branch, Tamil Nadu

பள்ளி முகவரி-

காயிதே மில்லத் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

காயிதே மில்லத் நகர்,

பெரியகலையம்புத்தூர்,

பழநி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

கூடுதல் விபரத்திக்கு:- 9884155777

புனித ரமலான் வாழ்த்துக்கள்..