பாகிஸ்தானில் ரயில் விபத்து 20 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று மோதியது.இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியாகினர் எனவும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர் எனவும் போலீசார் முதல் கட்டமாக தெரிவித்தனர்.இந்நிலையில், மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் சிகிச்சை பலனின்ரி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..