6
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்னமநல்லூர் ஊராட்சியில் சாலை ஓரமாக அப்பகுதி முழுவதும் பசுமையாக, பாதசாரிகளுக்கு நிழல் கொடுத்துக் கொண்டு இருந்த புளியமரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர், ஊராட்சி செயலரின் அனுமதியோடு அந்த புளியமரங்களை வெட்டி விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தகுந்த அதிகாரிகள் தலையீட்டு உடனடயாக இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.