கீழக்கரையில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் வேலையில், கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் மக்கள் பயன்பெறும் வகையில் ஜெனரேட்டர் வசதி, தண்ணீர் வசதி என நேரடியாக மக்கள் நல பணியில் இறங்கியுள்ளது பாராட்டதக்கது.
கீழக்கரை தெற்கு தெரு புதிய பேருந்து நிலையம் பின்பகுதி மற்றும் 500 பிளாட் பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் பள்ளியில் ஜெனரேட்டர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது செல்போன்கள், எமர் ஜென்சி லைட்டுகள் எமஜென்சி பேன்கள் ஆகியவைகளை ஜார்ஜ் செய்து கொள்ள இந்த ஜெனரேட்டர் உதவியாக இருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக மேல் விவரங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை கிழக்கு கிளை 741856945 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
You must be logged in to post a comment.