5
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி-பாறைபட்டி பகுதியில் உள்ள குளங்களில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவில் தனிபடை அமைக்கப்பட்டது.
இன்று (11/07/2019) பாறைபட்டி பகுதியில் மணல் திருடிக் கொண்டிருந்த 3 டிராக்டர்களை உதவி ஆய்வாளர்கள் சேக்அப்துல்லா, காதர்மைதீன் கொண்ட தனிபடையினர் பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
You must be logged in to post a comment.