கீழக்கரை உட்பட இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
இதை கண்டிக்கும் வண்ணம் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று (11/07/2019) கீழக்கரை திமுக கட்சியினர் கீழக்கரை மின்சார வாரியத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில் திமுக நிர்வாகிகள் ஹமீது சுல்தான், SKV சுஹைப் மற்றும் பல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.