தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா மேல மருதூர் கிராமத்தில் இரவு நேரத்தில் நீர் நிலைகள், ஓடைகள் மற்றும் தனியார் பட்டா இடங்களில் இரவு நேரங்களில் சரள் மணல் எடுத்து இரயில்வே பணிக்கு பயன்படுத்தி வருவதாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் அப்பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கு, பாசன வசதிக்கு பயன்படுத்தும் நீர்வரத்து கால்வாயில் மணல் எடுப்பதால் அதனால் நீர் வரத்து மூடபடுவதாகவும் அப்பகுதி மக்கள் மேல மருதூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர் புகாரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து இரவு நேரங்களில் சட்டத்திற்கு புறம்பாக சரள் மணல் அள்ளிய மூன்று கிட்டாச்சி வாகனங்களும், மூன்று லாரிகளையும் தடுத்து நிறுத்தி தருவை குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடுத்து நிறுத்திய வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு தருவைகுளம் காவல் துறையினர் சென்ற போது ஓடையில் பொதுமக்கள் மற்றும் வருவாய்துறையினர் தடுத்து நிறுத்திய வாகனத்தை அதன் உரிமையாளர் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனால் சட்டவிரோதமாக சரள் மணல் அள்ளிய வாகனத்தையும் அதனை எடுத்து சென்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கிராம அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
You must be logged in to post a comment.