திண்டுக்கல் நகர் மேற்கு காவல் துறை சார்பாக நேருஜி நகர் ரவுண்டானா அருகே திண்டுக்கல் நகர் உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் தலைக்கவசம் அணிவது குறித்தும் போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் அறிவுரைகளை பொது மக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் அழகுராஜா மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்
மேலும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிவந்த நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.