மதுரை மாநகரில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் 100 வார்டுகளில் உள்ள வார்டு பொறுப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்..100 வார்டுகளுக்கும் பொறுப்பு அலுவலராக ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் மூன்று காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு வார்டு எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு முக்கிய இடங்களில் CCTV கேமிராக்களை பொருத்தி குற்றவாளிகள் மற்றும் அந்நிய நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் அறிவுறுத்தினார்.
.
ஒவ்வொரு வார்டு பொறுப்பு அலுவலரும் தங்களது பகுதியில் உள்ள பொதுமக்களுடன் இணைந்து, காவல்துறை மற்றும் பொதுமக்களின் நல்லுறவை மேம்படுத்தவும் மற்றும் முக்கிய தகவல்களை பரிமாரிக்கொள்ளவும் Whatsapp Group ஆரம்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்..வார்டு பொறுப்பு அலுவலர்கள் வார்டு கமிட்டி கூட்டங்கள், வார்டு இளைஞர் கமிட்டி கூட்டங்களை அடிக்கடி நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் மற்றும் பொதுமக்களின் நலனில் வார்டு பொறுப்பு அலுவலர்கள் அதிககவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்..வார்டு பொறுப்பு அலுவலர் தங்களது வார்டில் நடைபெறும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை, குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை கூர்ந்து கண்காணித்து அவ்வப்போது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
.வார்டு பொறுப்பு அலுவலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள இளைஞர் கமிட்டியுடன் இணைந்து அனைத்து இளைஞர்களுக்கும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் பற்றி அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்..வார்டு பொறுப்பு அலுவலர்கள் தங்கள் வார்டில் உள்ள கெட்டநடத்தைக்காரர்கள் மற்றும் பழங்குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்கள் கெட்ட நடத்தைக்காரர்களுடன் சேர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபடாமல் மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) சசிமோகன் அனைத்து காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் 100 வார்டு பொறுப்பு அலுவலர்களும் கலந்துகொண்டனர்
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.