Home செய்திகள் மைக்கேல் பாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

மைக்கேல் பாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி மைக்கேல் ஆலயத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட சமூக தணிக்கையாளர் சித்திக் அலி தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கோட்டூர் ஊராட்சி  செயலாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:: கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

                            .                   நிலக்கோட்டை ஒன்றியம் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சிப் பகுதியாக உள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் சரிந்த நிலையில் உள்ளது.   இதனால்  விவசாயப்பணி வேலைகளும் முற்றிலுமாக பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. ஆகவே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் என்பதை மாற்றி 200 நாட்களாக வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.     இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கிராம பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!