Home செய்திகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் ஆய்வுக்கு கூட அனுமதியில்லை.அமைச்சர் மணிகண்டன் திட்ட வட்டம் ..

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் ஆய்வுக்கு கூட அனுமதியில்லை.அமைச்சர் மணிகண்டன் திட்ட வட்டம் ..

by mohan

ராமநாதபுரம் – மதுரை, கமுதி-மதுரை வழித்தடத்தில் தலா 2 , ஏர்வாடி – மதுரை, ராமேஸ்வரம் – திருச்சி, சாயல்குடி – மதுரை வழித்தடத்தில் தலா ஒரு பேருந்து, ராமேஸ்வரம் – மதுரை, பரமக்குடி – திருச்சி வழித்தடத்தில் தலா 4 என 15 பேருந்துகளின் இயக்கத்தை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன்,மாவட்ட   ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் தொடங்கி வைத்தார் .அமைச்சர் மணிகண்டன் கூறுகையில், சென்னையில் ஜூலை 4 ஆம் தேதி நடந்த விழாவில் அரசு போக்குவரத்து கழகத்தின் 500 பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்துகள் உள்பட 30 பேருந்துகள் காரைக்குடி மண்டலத்திற்ரு ஒதுக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு குறித்து மின் துறை அமைச்சர் தங்கமணியிடம் வலியுறுத்தினேன். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் மின் பாதை சீரமைப்பு பணி முடிந்து மின்சாரம் உடனடியாக விநியோகிக்கப்பட்டது. ராமநாதபுரம் நகரில் போதிய மின்சாரம் விநியோகம் செய்ய பட்டணம் காத்தான் பகுதியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரத்தில்அரசு மருத்துவக் கல்லூரி கட்டாயம் அமையும் என்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர்,அரசு   போக்குவரத்து கழக காரைக்குடி மண்டலதுணை மேலாளர்கள் ஆர்.சிவலிங்கம் ( வணிகம் ), கே.நலங்கிள்ளி (கோட்டம்), மைக் கேல்பட்டணம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி மற்றும் அரசு போக்குவரத்து கழக பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!