நரிப்பையூர் அருகே வேப்பமரத்து பனை கிராமத்தில் உள்ளசி.எஸ்.ஐ., பெத்தேல் சர்ச் வளாகத்தில் தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் நிறைவு விழா நடந்தது.
இராமநாதபுரம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு ஆணையம் (ஏஐஆர்டி)மற்றும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து அக்கன்சர் நிறுவன தகவல் தொழில்நுட்பஉதவியுடனான ஒரு மாத காலம் பயிற்சி வகுப்புகள்நடந்தது.
பனங்கருப்பட்
பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏ.ஐ.ஆர்.டி., நிறுவனத்தின் இயக்குநர் தாமஸ் பீட்டர் தலைமை வகித்தார். ஐபாட் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகணேசன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அற்புதம் வரவேற்றார். இடிஐஐ திட்ட அலுவலர் திருப்பதி, கிராமத்தலைவர் ஜீவராஜ், பள்ளித்தலைமையாசிரியர் டேரின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கிப்சன் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.