இராமநாதபுரத்தில் பத்திரிகையாளருக்கு சமூக சேவகர் விருது..

இராமநாதபுரம் ராயல் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. இதில், கடந்த காலங்களில் விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு உரிய சிகிச்சைக்கு உதவிய தினமணி நாளிதழ் நிருபரும், கட்டுரை யாளருமான இராமநாதபுரம் எஸ்விஎஸ் ஜெகஜோதியின் மனித நேய செயலை கவுரவிக்கும் வகையில், உதவி பிராந்திய ரோட்டரி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா சமூக சேவகர் விருது வழங்கினார்.

உதவி ஆளுநர் கே.நாகரெத்தினம், முன்னாள் செயலர் எம்.சோமசுந்தரம், நிர்வாகி ஆ.சண்முக ராஜேஸ்வரன், முன்னாள் மாவட்ட இணை செயலர் எம்.வீரபூபதி, தலைவர் டி.சோமசுந்தரம், தலைவர் ஜி.டி.அருண் பிரசாத், செயலர் எஸ்.விஜய பாஸ்கர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..