இராமநாதபுரம் இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு

இன்னர் வீல் கிளப் ஆப் இராம்நாட் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் சங்கத் தலைவியாக கவிதா செந்தில்குமார் பதவியேற்றார். இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமலினி சிறப்புரையாற்றினார். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளைஇன்னர் வீல் மாவட்டம்-321 ன் சேர்மன் லட்சுமிவர்தினி ராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கச் செயலர் கிருதிகா ரகுநாத் நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..