இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் என்.எஸ்.எஸ்.சார்பில் சர்வதேச யோகா தினவிழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் இராமநாதபுரம் ஈசா யோகா மையம் சார்பாக மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் இதில் ஈசா யோகா மைய பயிற்சியாளர் ராம்குமார்,என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ராஜேஷ்கண்ணா,தமிழ்நாடு டியூபால் அசோசியேஷன் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன்,கல்லூரி துணை முதல்வர் ராஜேந்திரன்,சேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.வருகை தந்த அனைவருக்கும் வேல்முருகன் நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.