காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம்..

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் இன்று 19-06-19 தேதி ஜமாபந்தி துவங்கியது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) நந்தீஸ்வரன் தலைமையில் கே.வி.குப்பம் மற்றும் வடுகந்தாங்கல் பிர்காவில் உள்ள 10 கிராமங்களில் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை , சான்றுகள் கேட்டு மனுக்கள் வாங்கப்பட்டது.

தாசில்தார் சுந்தர் கே.வி.குப்பம் வருவாய் ஆய்வாளர் ப்ரியா, வடுகந்தாங்கல் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை’ கிராம நிர்வாக அதிகாரிகள் உதவியாளர்கள் கலந்து கொண்டு கணக்குகளை அலுவலர்களிடம் சமர்பித்தனர். வரும் 26-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..