5
மதுரை மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு சுற்றுச் சுழல் பாதுகாப்பை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, பசுமை விருதை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடமிருந்து, அப்போதைய மதுரை ஆட்சியராக பணியாற்றி, தற்போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் கொ.வீரராகவ ராவ் பெற்றுக் கொண்டார்.
தமிழக சுற்றுச் சுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் , தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாடு துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிக்கர், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.