உசிலம்பட்டி மேலப்புதூரில் காமாட்சியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நாளான இன்று (12/06/2019) கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவில் பூசாரி கரகத்தை தலையில் வைத்தபடியே முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடைவர். அதனை தொடர்ந்து பெண்கள் அனைவரும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சென்றனர்.இந்த காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கரகத்தை வழிபட்டும், முளைப்பாரி எடுத்தும் வழிபட்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..