வேலூர் அருகே டாக்டர் அம்பேத்கார் சிலை அவமதிப்பு சாலை மறியல்..

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலையில் சமூகவிரோதிகளின் சிலர் அவருடைய சிலர் மீது சாதி மோதல் தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதி அவர் கழுத்தில் மாட்டி விட்டு சென்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோடி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் வேலூர் டூ அணைக்கட்டு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவலறிந்த டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் அரியூர் காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் ஆய்வாளர் பார்த்தசாரதி சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அவர் ஒரு வசனத்தை எழுதி மாட்டி சென்றவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..