சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிட்ட நவாஸ்கனி அனைத்து சமுதாய மக்களின் ஆதரவோடு அமோக வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நவாஸ்கனி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இன்று (11/06/2019 கீழக்கரை நகர் திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 96 வது பிறந்தநாளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக பொருப்பாளர் காதர் பாட்ஷா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் கீழக்கரை நகர் செயலாளர் SAH பஷீர் அகமது வரவேற்புரை வழங்கினார். நகர் துணை செயலாளர்கள் ஜமால் பாரூக், கென்னடி, நகர் அவைத்தலைவர் மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் ரவிச்சந்திரராமவன்னி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் அதைத் தொடர்ந்து நவாஸ் கனி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியாக கீழக்கரை தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் எஸ்.கே.வி.சுஐபு நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.