Home செய்திகள் மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நிதி உதவி…

மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நிதி உதவி…

by ஆசிரியர்

 கோவை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த திரு.பாஸ்கரன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய 2008-ஆம் இவருடன் பணியில் 751 உதவி ஆய்வாளர்கள் முன்வந்தனர். இதையடுத்து பாஸ்கரனின் குடும்பத்திற்கு அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூ.9 லட்சத்து 92 ஆயிரம் பணத்தை திரட்டினர்.

இதனை திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து மற்றும் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.ரெம்சியா ஆரோகியராஜ் மற்றும் பலர் சத்தியமங்கலத்தில் வசிக்கும் திரு. பாஸ்கரனின் மனைவிடம் ஒப்படைத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!