கீழக்கரை பழைய மீன் கடை அருகே மரம் சாய்ந்து சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

கீழக்கரை பழைய மீன் கடை அருகே இருந்த மரம் ஒன்று திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக அம்மரம் சாலையில் இருந்து நீக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.  அதிர்ஷ்டவசமாக அச்சமயத்தில் ஆள் நடமாட்டம் யாரும்  இல்லாததால் பெரும்  சேதம் ஒன்றும் ஏற்படவில்லை.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..