Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கடலாடி ஒன்றியம் சாயல்குடியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து கடலாடி ஒன்றிய அளவிளான பள்ளி சேர்ப்பு கருத்தரங்கம் மற்றும் பேரணி..

கடலாடி ஒன்றியம் சாயல்குடியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து கடலாடி ஒன்றிய அளவிளான பள்ளி சேர்ப்பு கருத்தரங்கம் மற்றும் பேரணி..

by ஆசிரியர்

07/06/2019 அன்று மாலை 03.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சாயல்குடியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து கடலாடி ஒன்றிய அளவிளான பள்ளி சேர்ப்பு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டியின் இயக்குநர் திரு.சா.சாத்தையா  தலைமையிலும், சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மகேந்திரன் முன்னிலையிலும் ஆரம்பமானது.

ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டியின் (RURAL WORKERS DEVELOPMENT SOCIETY)  திட்ட ஒருங்கினைப்பாளர் திருமதி.து.கனகவள்ளி  வரவேற்புரை வழங்கினார். PAD நிறுவன திட்ட மேலாளர் திரு மன்னர் மன்னன், SPEED நிறுவன இயக்குநர் திரு.தேவராஜ், ஆகியோர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், குழந்தைத்தொழிலாளர், குழந்தை திருமணம் குறித்தான விளிப்புணர்வும் கொடுத்தனர்.

கருத்தரங்கத்தை தொடர்ந்து சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் திரு.மகேந்திரன் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் சேர்போம் சேர்ப்போம் பள்ளி வயது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்போம். பெண்குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், என கோசங்கள் எழுப்பி பேரணி நடைபெற்றது. ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டியின் பணியாளர் திருமதி சி.சத்யா நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!