கோவிலுக்கு சென்று வந்த மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை-பரபரப்பு..

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள நயினாரகரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேங்காய் வியபாரம் செய்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி பிச்சம்மாள் இவர் ஊர்மேல் அழகியான் என்ற பகுதியில் சத்துணவு ஆசிரியையாக உள்ளார்.

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இன்று (07/06/2019) பணிக்கு விடுமுறையில் இருந்த அவர் உறவினர்களோடு வெள்ளிக்கிழமை என்பதால் இலத்தூரிலுள்ள ஒத்தபனை சுடலைமாடன் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு உறவினர் வாகனத்தில் திரும்பி வந்துள்ளார். இவர் கணவனிடம் சொல்லிவிட்டு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பழனிச்சாமிக்கு மதுப்பழக்கம் இருந்ததால் மதுப்போதையில் இருந்த அவர் மனைவி பிச்சம்மாளை தாக்கியுள்ளார்.

அதில் படுகாயம் அடைந்த பிச்சம்மாள் கணவரின் தாக்குதலில் பலியானார். மனைவியை தாக்கியதில் அவர் பலியானது போதை மயக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு தெரிய வரவே தான் மனைவியை அடித்து கொலை செய்து விட்டோம் என்ற அச்சத்தில் மதுப்போதையில் இருந்த கணவர் பழனிச்சாமியும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது இருவரும் இறந்த நிலையில் இருப்பதைக்கண்ட உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..