Home செய்திகள் சிமெண்ட் லாரி மோதி கோர விபத்து-முதியவர் பலி..

சிமெண்ட் லாரி மோதி கோர விபத்து-முதியவர் பலி..

by ஆசிரியர்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி நீரேற்றும் நிலையம் அருகே சவூதியிலிருந்து விடுமுறையில் ஊர் வந்த முதியவர் சிமெண்ட் லாரி மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பேட்டை தெருவில் வசிக்கும் அபூபக்கர் என்பவரின் மகன் முகம்மது இஸ்மாயில் (வயது 62).இவர் சவூதி அரேபியாவில் வேலை செய்கிறார்.சமீபத்தில் விடுமுறையில் ஊர் வந்துள்ள நிலையில் 07.06.19 இன்று காலை 10 மணியளவில் நகராட்சி நீரேற்றும் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் கிருஷ்ணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜபாளையத்திலிருந்துகேரளாவிற்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி அவரின் பைக் மீது மோதியது.இதில் இஸ்மாயில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சாலையில் விழுந்தார்.அப்போது அவரின் கழுத்தில் லாரியின் சக்கரம் ஏறி தலை துண்டாகி சம்பவஇடத்திலேயே பலியானார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தன் விபத்தில் பலியான இஸ்மாயிலின் உடலை கைபற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார். இறந்த இஸ்மாயிலுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.தப்பி ஓடிய லாரி டிரைவரை கடையநல்லூர் போலிஸ் தேடிவருகிறது.

நேற்று கட்டிட தொழிலாளி மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.இது போன்ற கோர விபத்துகளை தடுக்க காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!