மதுரை மாவட்டம் பைபாஸ் ரோடு வழியாக எல்லிஸ் நகர் செல்லும் மழை நீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை செடி கொடிகளும் மண்டி கிடக்கிறது.
மேலும் இந்த வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் கழிவுநீர் தேங்கி மூச்சை முட்டும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மூச்சை அடக்கி அந்த இடத்தை கடப்பதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகிறாரகள்.
அதே சமயம் மழை நீர் வாய்க்காலில் எப்படி கழிவுநீர் கலக்கிறது. பாதாளச் சாக்கடை இருக்கும் பட்சத்தில் அதில் கழிவு கலக்க வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் இதற்கான காரணம் என்ன என்பதை அரசு அதிகாரிகள் கண்டறிந்து, சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் மழை நீர் வாய்காலை சுத்தமாக வைத்திருக்க முடியும்.
மேலும இதற்கை காரணம் சில தனியார் கழிவுநீர் ஏற்றும் வாகனங்கள் அந்த வாய்க்காலில் கழிவு நீரை ஊற்றி செல்வதாகவும், சில அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தும் கழிவு நீரை நேரடியாக வாய்க்காலில் திறந்து விடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆகையால் அரசாங்கம் விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.