Home செய்திகள் மதுரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்..

மதுரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து  செல்லும் அதிகமான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலையில் கூடுதலான நெரிசலான நேரங்களில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கிய நிலையில் பயணம் செய்து வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் பள்ளி, கல்லூரி நேரங்களில் காலையிலும் மாலையிலும் கிராமப்புறங்களுக்கு அதிகப்படியான பேருந்துகளை இல்லாதது ஆகும்.  நெரிசலான நேரங்களில் அரசு பேருந்துகள் குறைவாக இயக்பப்படுவதால் படியில் தொங்கிய நிலையில் பயணம் செய்கிறார்கள், இதனால் மாணவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்படவும்,  மரணம் அடையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்த அவல நிலையை போக்க அரசு போக்குவரத்து கழகம் நெரிசலுக்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிகள், பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு இயக்க வேண்டும். 

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!