9
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூரில் நேற்று (06/06/2019) இரவு பெய்த கனமழையால் வேலு மகன் பாண்டி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
இதில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்ததில் பீரோவில் இருந்த பொருட்கள், வீட்டு பத்திரம், சேலைகள், வேட்டிகள் மற்றும் அரிசி உள்ளீட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் 10க்கும் மேற்பட்ட கோழிகளும் இறந்தன. இதில் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மேலும் அருகிலிருந்த பெரியகருப்பன், மலைச்சாமி ஆகிய இருவரின் வீடுகளிலும் மழை நீர் புகுந்தது பெரும் பாதிப்புக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.