நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கால்நடை மருத்துவமனை அருகே அரசு பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலியானார். கடையநல்லூர் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் மாடசாமி மகன் இசக்கி (வயது 45).கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 05.06.19 மாலை 4 மணியளவில் கால்நடை மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முயன்றபோது தென்காசியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த அரசு விரைவுப் பேருந்து இசக்கியின் மீது மோதி அருகிலுள்ள கடைக்குள் புகுந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட இசக்கி சாலையில் விழுந்து சம்வ இடத்தில் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடையநல்லூர் காவல் துறை அரசுப்பேருந்து ஓட்டுனர் வி.கே.புரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் கணபதி சங்கரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.