12
கோடை விடுமுறைக்கு பின் இன்று (03/06/2019) பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகள் குதூகலத்துடன் பள்ளிக்கு வந்த காட்சியை காண முடிந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறை முடிந்து இன்று03/06/2019 அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்து மாத கணக்கில் பார்க்காத நண்பர்களை நலம் விசாரித்து மகிழ்ந்தனர். மேலும் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பும், மலர்களும் கொடுத்து வரவேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.