மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திமுக தெற்கு புறநகர் மாவட்டம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கடந்த 3 நாட்களாக 10க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர். இறுதி போட்டி நடைபெற்றதை தொடர்ந்து என்கைனர் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரம் கோப்பை, தங்க பதக்கம், ரூ 10000 ரொக்க பணத்தை வழங்கினார்.
இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.